முத்துப்பேட்டையில் தொடரும் காவல்துறை அராஜகம்

>> Saturday, February 6, 2010





அடித்து சேதம் பட்ட வீடு ............


S.D.P.I. கட்சியின் திருவாரூர் மாவட்ட துணைதலைவர் M.M. பாவா பக்ருதீன் (முத்துபேட்டை பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர்) அவருடைய வீட்டிற்குள் கதவை உடைத்து கொண்டு அத்துமீறி உள்ளே சென்று பொருட்களை சேத படுத்தி அவரது மகன் ரஹமத்துல்லாவை அடித்து இழுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று உள்ளனர்.

மேலும் அவரது வீட்டில் உள்ள பணத்தையும், நகையையும்
S.P. பிரவின் குமார் அபிநபு மற்றும் A.D.S.P. துரைராஜ் தலைமையில் இருபது காவலர்கள் திருடி சென்றுள்ளனர். (பணம் ரொக்கம் ரூ. 25,000 நகை 12 சவரன்) இதுபோல் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் பகுதியில் நடைபெற்று வருவதால் முஸ்லிம் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதாக S.D.P.I. மாவட்ட தலைவர் எஸ். அப்துல் அஜீஸ் குறியுள்ளார்.

கலவரத்தில் ஈடுபட்ட சங்பரிவார் அமைப்புகள் சேர்ந்தவர்களை கைது செய்யாமல் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்தும், நள்ளிரவில் பெண்கள் மட்டும் இருக்கும் முஸ்லிம் வீடுகளில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி ADSP துரைராஜ் தலைமையில் முத்துப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் சமரசம், சார்பு ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் மற்றும் 20க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த போலிஸார் அராஜகம் புரிந்துள்ளனர்.

Read more...

பாகிஸ்தானில் பிரமாண்ட கண்டனப் பேரணி

அமெரிக்க ராணுவவீரனையும், எஃப்.பி.ஐ ஏஜண்டையும் கொலைச் செய்ய முயற்சித்ததாக குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த நியூரோ சயிண்டிஸ்ட் டாக்டர் ஆஃபியா சித்தீகியை குற்றவாளி என தீர்ப்புக்கூறிய அமெரிக்க நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கெதிராக பாகிஸ்தானில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் உள்ளிட்ட பல நகரங்களிலும் ஆஃபியாவிற்கு ஆதரவாகவும், அமெரிக்காவை கண்டித்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட பேரணிகள் நடைபெற்றன.

2008 ஆம் ஆண்டு கஸ்னி மாகாணத்தில் விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் பொழுது வாரண்ட் ஆபீஸரின் துப்பாக்கியை பறித்து எஃப்.பி.ஐ ஏஜண்டையும், அமெரிக்க ராணுவ வீரனையும் கொலை செய்ய முயன்றார் எனக்கூறித்தான் டாக்டர் ஆஃபியா சித்தீக்கிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

ஆனால் அச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ஆஃபியாவிற்குதான் குண்டு காயம் பட்டது. ’லேடி காயிதா’ என அமெரிக்க ஊடகங்கள் டாக்டர் ஆஃபியா சித்தீக்கியை வர்ணித்திருந்தன. இந்தத் தீர்ப்பு தங்களுக்கு துணிவையே ஏற்படுத்துவதாக டாக்டர் ஆஃபியா சித்தீக்கியின் சகோதரி பவுஸியா சித்தீக்கி பேரணியில் உரை நிகழ்த்தியபோது குறிப்பிட்டார்.

டாக்டர் ஆஃபியா சித்தீகியை குற்றவாளி என தீர்ப்புக்கூறிய அமெரிக்க நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆஃபியாவின் குடும்பத்துடன் சேர்ந்து விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மேற்க்கொள்வதாக வெளியுறவுத்துறை அதிகாரி அப்துல்பாசித் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு பற்றி எரிவதற்கு டாக்டர் ஆஃபியாவின் சம்பவம் காரணமானதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

Read more...

முத்துபேட்டையில் இரு மதத்தினர் மோதல்

>> Saturday, January 30, 2010

முத்துப்பேட்டையில் இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் கடைகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன. அரசு பஸ் உடைக்கப்பட்டது.

முத்துபேட்டைஅடுத்த பேட்டையைச் சேர்ந்தவர் சிவா (39). இவர் பாஜக மாவட்டச் செயலாளராக உள்ளார்.

இவர், நேற்று முன்தினம் மாலை தனது டாடா சுமோவில் முத்துப்பேட்டை கடைவீதி வழியாக வீட்டிற்கு சென்றபோது தெற்கு வீதி சந்திப்பில் அவரது கார் மீது, மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியதில் கார் கண்ணாடி உடைந்தது.

இதனால், தன் மீதும், கார் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி தனது ஆதரவாளர்களுடன் முத்துப் பேட்டையில் சிவா புகார் செய்தார்.

இந் நிலையில், தெற்கு வீதியில் நடந்து சென்ற பேட்டையைச் சேர்ந்த டைலர் தங்கராசு (57), நடராஜன் ஆகியோரை சில இளைஞர்கள் வழி மறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த இரு சம்பவங்களையடுத்து பாஜகவைச் சேர்ந்தவர்கள் சிவா தலைமையில் திரண்டு, பேட்டை பகுதிக்குள் இன்னொரு நுழையக் கூடாது என்று தடுத்தனர். இதனால், இரு மதத்தினர் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் இரும்பு பைப், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

இந் நிலையி்ல் சிலர் கடைகளை தாக்கி சூறையாடி தீ வைத்ததோடு, திருத்துறைப்பூண்டி சென்ற அரசு பஸ்சை தாக்கி சேதப்படுத்தினர்.

இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

அதிரையில் ஆய்ஷா மகளிர் அரங்கம் நடத்தும் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்

>> Friday, January 29, 2010


Read more...

காஷ்மீரில் தடை நீக்கம்

>> Sunday, January 24, 2010

காஷ்மீரில் ப்ரீ பெய்டு செல்போன் சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் முறையான தகவல்கள், முகவரி தெரிவிக்காமல் பிரீ பெய்டு இணைப்புகளை தீவிரவாதிகள் பெற்று செல்போன் மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் பிரீ பெய்டு செல்போன் சேவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் மத்திய அரசு தடை விதித்தது. பிரீ பெய்டு சேவையை பயன்படுத்துபவர்கள் போஸ்ட் பெய்டு சேவைக்கு மாற அறிவுறுத்தப்பட்டனர்.

இதனிடையே, மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தடையை நீக்க முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை 100% உறுதிப்படுத்தும் வகையிலான திட்டத்துடன் வந்தால், தடையை நீக்குவது பற்றி அரசு பரிசீலிக்கும்’’ என்றார்.

இந்நிலையில், காஷ்மீரில் ப்ரீ பெய்டு சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நேற்று நீக்கியது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரீ பெய்டு செல்போன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் முகவரியை சரிபார்க்க செல் போன் சேவை நிறுவனங்கள் உறுதி அளித்தன. இதைத் தொடர்ந்து தடை நீக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரீ பெய்டு செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. பிரீ பெய்டு இணைப்பு பெற விரும்புவோர், மற்றொரு போஸ்ட் பெய்ட் எண் அல்லது பிஎஸ்என்எல் தொலைபேசி எண்ணையோ அளிக்க வேண்டும்.

அவ்வாறு அளிக்காத வரை, வாடிக்கையாளருக்கு பிரீ பெய்டு இணைப்பு அளிக்கக் கூடாது என்று செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Read more...

நளினியை விடுதலை செய்வதில் தவறில்லை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர்,’’நளினி விடுதலை விவகாரத்தில் அரசின் மரபுகளையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். நளினியை போலவே வீரப்பனின் அண்ணன் மாதையன் 22 வருடங்களாக எந்தவித விசாரணையும் இல்லாமல் ஜெயிலில் இருக்கிறார்.

மனிதாபிமான அடிப்படையில் நளினியை விடுதலை செய்வதில் தவறில்லை’’என்று கூறினார்.

Read more...

இந்திய மாணவர் மீது தாக்குதல்

>> Monday, November 9, 2009

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் சாய்ரத் தன் திவாரி (22). இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள பலாரட் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். நேற்று இவர் தனது வீட்டுக்கு செல்லும் வழியில் தனது நண்பருடன் அங்குள்ள கோவிலுக்கு சென்றார்.

அப்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த 2 பேர் திவாரியை வழி மறித்து அவரது முகத்தில் கையால் தாக்கினார்கள். உனக்கு இங்கு என்னடா வேலை. நீ இங்கு இருக்க கூடாது என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே அந்த நபர்கள் தாக்கியதில் திவாரி காயம் அடைந்தார். ஆஸ்பத்திரி செல்ல மறுத்ததால் அவருக்கு ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Read more...

About This Blog

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP